Thursday, October 21, 2010

கிறுக்கல்கள் - 2


என் இதயம் என்ற
கருவறை சுமக்கின்ற
குழந்தை - நீ...

என்னைச் சுற்றி
கொண்டிருக்கும்
பட்டாம்பூச்சிகள் -
உன்னைப் பற்றிய
நினைவலைகள்!

நாம் அறிந்த
நம் இதயங்களின்
மொழி - மௌனம்

என் நகங்களில்
நட்சத்திரங்கள் மின்னக்கண்டேன்
நீ புறங்கையில் இட்டமுத்தம்
என் நரம்புகளினஊடே பரவுகையில்.....

என்னுடன் நீ
இல்லை....
இல்லாமல் இருக்கின்றாய்
நானோ இறந்தும்
வாழ்கிறேன்!

கிறுக்கல்கள் - 1



கண்ணீரை துடைப்பது
உன் விரல்கள் என்றால்
அழுகை கூட ஆனந்தம்தான்...

அழுவதற்கு ஆசை
அரவணைப்பது நீ என்பதால்...

உன்னால் ஏற்படும்போது
சோகம் கூட சுகமானது
சுகம் சுகந்தமானது...

என் மனம்
ஆனந்தமடைந்தது
வாழ்த்து அட்டைக்கு
அல்ல!
கொடுத்தது நீ
என்பதால்...


ஒற்றை வார்த்தையும்
கவிதையானது
உனது பெயரை
எழுதுகையில்...