Thursday, November 17, 2011

புத்திசாலி...........!!!!!!!!


நம் காதலுக்காக என் உயிரையும்
இழக்கத் தயார் என்றாள்
என் அன்புக்  காதலி.

நான் இறக்கும் தருவாயில்
நினைவு வந்தது
"என் உயிர் நீ தான்" என்று
அவள் கூறியது.....

-நன்றி நாகராஜ்(Calsoft)

Wednesday, November 16, 2011

நன்னூலும் காதலும்....!!!!!

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவதியல்பே
என்பது நன்னூலின் விதி.
உன்னுடலில் மட்டுமே என்னுயிர் ஒன்றும்
என்பது காதலின் விதி.....!!!

உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
என்பது நன்னூலின் விதி.
நீ இல்லையெனில் என்னுயிர் என்னுடலை விட்டோடும்
என்பது தான் காதலின் விதி......!!!

இரட்டைக்கிளவியைப் பிரித்தால் பொருள் தாராது
என்பது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை நம்மிருவரைப்பிரித்தால்
என்னுயிர் என்னுடலில் இருக்காதென்பது....!!!

உண்மை+காதல்=உண்மைக்காதல் - இங்கு
உயிரையும் மெய்யையும் இணைக்கத்தான் உடம்படுமெய்.
ஆனால் உன்னையும் என்னையும் பிரிக்கதான்
இந்த மனித இனம்....!!!

Thursday, October 20, 2011

சிவபெருமானுக்கு அரைக்கண்....!

வெகு நாட்கள் கழித்து எங்களுடைய பதிவை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி.

இன்று நாம் காளமேகப் புலவரின் ஒரு பாடலைப் பொருளுடன் பதிவாக வெளியிடவுள்ளோம்.

பாடல்:

முக்கண்ணன் என்றரனைமுன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ள தரைக் கண்ணே - மிக்க
உமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்று
அமையுமித னாலென் றறி!

பொருள்:

சிவபெருமானை அனைவரும் முக்கண் முதல்வன் என்று அழைக்கின்றனர் அல்லவா!. அனால் நமது புலவர் அவருக்கு மூன்று கண்கள் இல்லை. பதிலாக அரைக் கண் மட்டுமே என்று இப்பாடலில் கூறுகின்றார்.

எப்படி என்று யூகிக்கத் தேவையில்லை. அவரே இப்பாடலிலேயே விளக்கமும் அளித்துள்ளார் அர்த்தநாரிஸ்வரர் என்பது சிவனும் உமையாளும் சரிபாதி என்பதை கூறும் ஒரு அவதாரம். அதில் சிவன் உடல் பாதி பார்வதி உடல் பாதி. அகவே மூன்று கண்ணில் ஒன்றரை கண்கள் பார்வதியின் கண்கள். மீதமுள்ள ஒன்றரை கண்களில் ஓன்று வேடன் கண்ணப்பனுடையது.

அகவே சிவபெருமானுக்கு சொந்தமானது மீதமுள்ள அரைக் கண் மட்டுமே என்று நகைச்சுவையாக புலவர் இப்பாடலில் கூறியுள்ளார்.