உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவதியல்பே
என்பது நன்னூலின் விதி.
உன்னுடலில் மட்டுமே என்னுயிர் ஒன்றும்
என்பது காதலின் விதி.....!!!
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
என்பது நன்னூலின் விதி.
நீ இல்லையெனில் என்னுயிர் என்னுடலை விட்டோடும்
என்பது தான் காதலின் விதி......!!!
இரட்டைக்கிளவியைப் பிரித்தால் பொருள் தாராது
என்பது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை நம்மிருவரைப்பிரித்தால்
என்னுயிர் என்னுடலில் இருக்காதென்பது....!!!
உண்மை+காதல்=உண்மைக்காதல் - இங்கு
உயிரையும் மெய்யையும் இணைக்கத்தான் உடம்படுமெய்.
ஆனால் உன்னையும் என்னையும் பிரிக்கதான்
இந்த மனித இனம்....!!!
என்பது நன்னூலின் விதி.
உன்னுடலில் மட்டுமே என்னுயிர் ஒன்றும்
என்பது காதலின் விதி.....!!!
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
என்பது நன்னூலின் விதி.
நீ இல்லையெனில் என்னுயிர் என்னுடலை விட்டோடும்
என்பது தான் காதலின் விதி......!!!
இரட்டைக்கிளவியைப் பிரித்தால் பொருள் தாராது
என்பது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை நம்மிருவரைப்பிரித்தால்
என்னுயிர் என்னுடலில் இருக்காதென்பது....!!!
உண்மை+காதல்=உண்மைக்காதல் - இங்கு
உயிரையும் மெய்யையும் இணைக்கத்தான் உடம்படுமெய்.
ஆனால் உன்னையும் என்னையும் பிரிக்கதான்
இந்த மனித இனம்....!!!
excellent!
ReplyDelete@Fotoart Thanks
ReplyDeleteavvvvvvvvvvvvv......epdinga ipdilaam?!!! kolaverium evandi unna pethaanum irukara kaalathula intha mathiri poemsumuma!!
ReplyDelete@gils Thanks for your comments
ReplyDelete