Thursday, October 20, 2011

சிவபெருமானுக்கு அரைக்கண்....!

வெகு நாட்கள் கழித்து எங்களுடைய பதிவை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி.

இன்று நாம் காளமேகப் புலவரின் ஒரு பாடலைப் பொருளுடன் பதிவாக வெளியிடவுள்ளோம்.

பாடல்:

முக்கண்ணன் என்றரனைமுன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற் குள்ள தரைக் கண்ணே - மிக்க
உமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்று
அமையுமித னாலென் றறி!

பொருள்:

சிவபெருமானை அனைவரும் முக்கண் முதல்வன் என்று அழைக்கின்றனர் அல்லவா!. அனால் நமது புலவர் அவருக்கு மூன்று கண்கள் இல்லை. பதிலாக அரைக் கண் மட்டுமே என்று இப்பாடலில் கூறுகின்றார்.

எப்படி என்று யூகிக்கத் தேவையில்லை. அவரே இப்பாடலிலேயே விளக்கமும் அளித்துள்ளார் அர்த்தநாரிஸ்வரர் என்பது சிவனும் உமையாளும் சரிபாதி என்பதை கூறும் ஒரு அவதாரம். அதில் சிவன் உடல் பாதி பார்வதி உடல் பாதி. அகவே மூன்று கண்ணில் ஒன்றரை கண்கள் பார்வதியின் கண்கள். மீதமுள்ள ஒன்றரை கண்களில் ஓன்று வேடன் கண்ணப்பனுடையது.

அகவே சிவபெருமானுக்கு சொந்தமானது மீதமுள்ள அரைக் கண் மட்டுமே என்று நகைச்சுவையாக புலவர் இப்பாடலில் கூறியுள்ளார்.

1 comment:

  1. unga aaaraichi chaaancela...kaalamega pulavaroda poemsa vachu phd panreengalao??

    ReplyDelete