Wednesday, July 1, 2009

க்வாட்டர் கோயிந்தும் இலங்கைப் பிரச்சனையும்

நம் பெசன்ட்நகர் பணிமனை அருகேயுள்ள டாஸ்மாக்கில் எப்போதும் சண்டைக்கும் சச்சரவிற்கும் குறைவே இருந்ததில்லை. 'க்வாட்டர்' கோயிந்து அதில் முக்கியமான நபர். ஆள் பக்கா லோக்கல். அரசியல் பேச்சு எங்க வந்தாலும் அங்க இவரு சம்மன் இல்லாம ஆஜராயிடுவாறு.ஆனா இவரு எந்தக் கட்சினு யாருக்கும் தெரியாது. டெய்லி ஒரு கரைவேட்டில இவர பாக்கலாம்.எல்லா கட்சி மீட்டிங்கும் அட்டென்ட் பண்ணுவாரு. ஒரு க்வாட்டர் வாங்கிதரன்னு சொன்னாப் போதும், அந்தக் கட்சிக்கு தற்காலிக கொ.ப.சே இவருதான். ஆனா தேர்தல் சமயத்துல மட்டும் வேளைக்கு ஒரு க்வாட்டர் தேவைப்படும். அது மட்டும் செஞ்சா போதும், இவரு ஓட்டு அவங்களுக்குதான்.


இன்று சட்டசபையில் முதல்வரின் பேச்சைக் கேட்டு நம் கோயிந்து அண்ட் கோ வின் கமெண்ட்ஸ் இதோ...

முதல்வரின் பேச்சு:

தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் வளமிக்கதாக ஆக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது ராஜபக்சவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்தச் செய்ய வேண்டும்.

இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும் இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.


ஒருவர்:

இப்ப எதுக்கு தீடீர்னு இலங்கை அரசுக்கு சப்போர்ட் பண்றாரு?

கோயிந்து:

ராஜபக்சே அவரோட மந்திரி சபைல எதுனா இலாகா தரன்னு சொல்லிருப்பாரு, அதான் இந்தக் கரிசனம். அதுக்காக நம்ம முதல்வர் குடும்பதோட இலங்கை போயிட்டு வந்தாலும் ஆச்சர்யபட்றதுக்கில்ல
.
ஒருவர்:

அப்படிலாம் இல்லபா...நம்ம தமிழருக்காக கடுதாசி போடறாரு, போன் பண்றாரு...ரொம்ப சிரமபடராறு பா. இதுக்காச்சும் மத்திய அரசு பதில் சொல்லணும்பா..

கோயிந்து:

ஒரு பதிலும் வராது. இந்த விஷயம் சீரியஸ்னா அவரே நேர்ல போயிருப்பார்ல. அதனால தான் பிரதமரும் உண்மையான நிலவரத்தப் புரிஞ்சிக்கிட்டு பதில் சொல்லாம விட்டுடாரு.

2 comments:

  1. Interesting aa yeluthureenka..but intha post vazhiya yenna solla vareenkanu puriyala

    ReplyDelete
  2. எலே கோயிந்து தாங்க முடியலடா!

    ReplyDelete