Wednesday, July 15, 2009

கர்மவீரர் காமராஜ்



இன்று
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள். தமிழ் கூறும் பதிவுலகில் யாரும் இதைப்பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. (இதை எழுதும்போது தான் இட்லிவடையாரின் பதிவை கவனித்தேன்)

தெரிந்தவர்களின் பிறந்த நாள், திருமண நாள் இவற்றுக்கு வாழ்த்து சொல்லிப் பதிவு போடும் நாம் கல்விக்கண் திறந்த ஏழைத் தலைவனைப் பற்றி ஏன் எழுதக்கூடாது என்று நினைத்ததால் இந்தப்பதிவு.

தமிழக அரசியல் வரலாற்றில் நேர்மை, எளிமை, துணிவு, ஒழுக்கம் இவற்றுக்கு உதாரணமாய் ஒருவரை சொல்லமுடியுமென்றால் அவர் காமராஜர் மட்டும் தான். வருடாவருடம் அரசு சார்பில் அவரின் படத்திற்கு மாலை மரியாதை மட்டும் தரப்படும். ஆனால் அதிகம் கவனிக்கப்படாத தலைவர்கள் பட்டியலில் இவருக்கு முதலிடம் தரலாம். (காந்தி தான் அதிகம் கவனிக்கப்படுகின்றார் - ரூபாய் நோட்டுகளின் மூலம்!). காங்கிரஸ் கட்சி கூட பெயரளவில் இவருக்கு மரியாதையை செய்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுவார்கள். ராகுல் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பார்க்கும்போது இன்று சற்று கவனிப்பு கம்மிதான். தேர்தல் சமயத்தில் மட்டும் காமராஜர் மீண்டும் உபயோகப்படுத்தப்படுவார். (இது தேவலாம், இன்னும் சிலர் கட்சி விளம்பரத்திற்கு மட்டுமே அவரின் புகைப்படத்தைப் போடுகின்றார்கள் - அதுவும் கூட ஜாதியின் பெயரைச் சொல்லி).

இந்தப்பதிவின் மூலம் காமராஜரின் பெருமைகள் பற்றி நான்கு பேர் தெரிந்துகொண்டாலே போதும். காமராஜர் இல்லாத தமிழ்நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும் என்று அறியவேண்டுமென்றால் அவர் முதல்வராக இருந்த போது கொண்டு வந்தத் திட்டங்களைப் பார்த்தாலே புரியும்.

கல்வி:

பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
கட்டாய/ இலவச கல்வி.
பகல் உணவுத்திட்டம் (இன்றைய சத்துணவு).

அவரின் ஆட்சிக் காலத்தில் இலவசக்கல்வி மூலம் பள்ளி செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது.

தொழில் மேம்பாடு:

நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
கல்பாக்கம் அணுமின் நிலையம்
திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை
ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை
ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
சேலம் இரும்பு உருக்காலை
மேட்டூர் காகித தொழிற்சாலை
சங்ககிரி துர்கம் இந்திய சிமெண்ட்ஸ்
அரக்கோணம் இலகுரக ஸ்டீல்பிளான்ட் தொழிற்சாலை

தொழிற்பேட்டைகள்:

கிண்டி, அம்பத்தூர், ராணிபேட்டை, மதுரை, விருதுநகர், மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி முதலியன.

அணைகள்:

ஆழியார் - பரம்பிகுளம் அணை
அமராவதி அணை
மலம்புழா அணை
மணிமுத்தாறு அணை
சாத்தனூர் அணை
வைகை அணை
கிருஷ்ணகிரி அணை
மேட்டூர் பாசன கால்வாய்
வாலையார் அணை
மங்களம் அணை
ஆரணியாறு அணை


இதுபோக இரண்டு முறை பாரதப் பிரதமரைத் தேர்வு செய்தவர் (லால்பகதூர் சாஸ்திரி & இந்திரா காந்தி). அதனால் கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்டார்.

இவரின் கே-பிளான் மிகப் பிரபலம். (இந்த காலத்தில் அதற்கு இடமில்லை). அதாவது வயதானவர்கள் அரசு பதவிகளில் இருந்து விலகி கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும். இது தான் அந்த பிளான். இதன் அடிப்படையில் முதலவர் பதவியிலிருந்து விலகினார். (இப்போது புரிகிறதா இந்த பிளான் இன்றைக்கு ஏன் வேலை செய்யாது என்று?).

இவ்வளவு செய்தும் மக்கள் அவரை தேர்தலில் தோற்க செய்தார்கள். அதையும் கூடப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். மற்றவர் போல எதிர்கட்சிகள் செய்த சூழ்ச்சி என்றோ, கள்ளவோட்டு என்றோ சொல்லவில்லை. கட்சி வேறு நட்பு வேறு என்று வாழ்ந்து காட்டினார். அதனால் தான் பெரியார் தொடங்கி அண்ணா வரை இவரைப் பாராட்டாதவர் எவருமில்லை. இவரிடமிருந்து இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய உள்ளது. ஆனால் துரதிஷ்ட வசமாக ஓட்டு வாங்குவதற்கு மட்டுமே இவரின் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.


வாழ்க தமிழ்! வளர்க தமிழர் !!

6 comments:

  1. illavasum illavasummunu oora aduchu oolaila podara karunanidhi kalathula valuromunu naenaicha vaethanaya irrukku..

    good post..

    ReplyDelete
  2. ada..ithu pudusa irukay...politiciansa paarati oru post!! :) nallaruku unga writeup...and nanri hai for the comments on my post

    ReplyDelete
  3. @gils

    // politiciansa paarati oru post!! //
    - thayavu senju kamaraj a politicians list la serkatheenga plz.

    //nallaruku unga writeup...//
    - mikka nandri.athuvum ungakita irunthu intha paaratu vanga koduthu vachrukkanum

    //and nanri hai for the comments on my post
    //
    - kaviathi nalla irunthuchu.athan comment pannan.

    ReplyDelete