Friday, July 17, 2009

காசேதான் கடவுளப்பா!

ஓவர் பீலா உலகநாதனின் ஒரு டிவி ஷோ விமர்சனம்
பணத்திற்காக உங்கள் குடும்ப மானம் மரியாதையைப் பற்றி கவலைப்படாத மனிதர்களைக் கண்டதுண்டா? அவர்கள் இருபது நம் நாட்டில் தான்.

மேற்கத்திய நாடுகளில் பிரபலமாக உள்ள ரீயலிட்டி ஷோ இப்போது நம் நாட்டிலும் வளரத் தொடங்கியுள்ளது. க்ரோர்பதி, கோடீஸ்வரன் வரிசையில் இப்பொது புதிதாய் வந்துள்ள நிகழ்ச்சி 'சச் கா சாம்னா' அதாவது 'உண்மையை சந்தியுங்கள்' என்று பொருள் வரும். (மொமென்ட் ஆப் தி ட்ரூத் என்னும் பிரபலமான நிகழ்ச்சியின் இந்திய காப்பி). இந்த நிகழ்ச்சியில் இருபத்தியொரு கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும். மாறாக பொய் சொன்னால் அவர் தோல்வியடைந்து விடுவார். (இதற்காக 'லை டீடக்டர்' என்று சொல்லப்படும் கருவி பயன்படுத்துகிறார்கள். ஒருவர் பொய் சொல்லும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களை வைத்து இது காட்டிகொடுக்கும். இது எந்த அளவிற்கு நம்பத்தன்மை வாய்ந்தது என்று தெரியவில்லை).

இந்த நிகழ்ச்சியில் பெரியவர்கள் அதாவது மேஜர், மட்டுமே கலந்து கொள்ளலாம். (குழந்தைகள் பொய் சொல்லாது என்பதற்காக கூட இருக்கலாம்). முதல் கேள்வியில் ஆரம்பித்து படிப்படியாக ஆயிரம் ரூபாய் முதல் இறுதி கேள்வி வந்தால் ஒரு கோடி பரிசு கிடைக்கும். கலந்துகொள்பவர் குடும்பத்தினரும் நிகழ்ச்சியின்போது உடன் இருப்பார்கள். அவர்களை வைத்துக்கொண்டே சில தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்பார்கள். உதாரணமாக 'உங்கள் அப்பா வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளாரா?' என்பன கேட்கப்படும். நீங்கள் இந்த கேள்விக்கு உண்மையை சொல்ல வேண்டும் மாறாக பதில் சொல்ல விரும்பவில்லை என்றால் போட்டியிலிருந்து விலகி விடலாம். அதுவரை வென்ற பணம் என்ன உள்ளதோ அதை கொடுத்து விடுவார்கள். இதே கேள்வியை வேறு ஒருவர் நம்மிடம் கேட்டால் கண்டிப்பாக நாம் அஹிம்சையை மறந்து அவரை அடிக்கக்கூட செல்வோம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவ்வாறு செய்ய முடியாது. பல கேள்விகள் இது மாதிரிதான் இருக்கும் என்பது நமக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிடும். இது எந்த அளவிற்கு அந்தக் குடும்பத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் என்று தெரிந்தும் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்களை என்னவென்று சொல்வது?இவையனைத்தும் தெரிந்தும் ஏன் கலந்து கொள்ள வேண்டும். காரணம் மிகச்சுலபம், பணம்.

நாம் முன்பு குறிப்பிட்ட இந்தக் கேள்வி ஒருவருக்கு கேட்கப்பட்டது. அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டு விலகிக்கொண்டார்.


ஆசிரியப் பெண்மணி ஒருவர் இந்த நிகழ்ச்சியில் தம் குடும்பத்துடன் .(அம்மா, அப்பா, கணவர்,மகன், அக்கா, அக்காள் கணவர் மற்றும் தம்பி) கலந்து கொண்டார்.

இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள்

- உங்கள் கணவர் அழகா அல்லது உங்கள் அக்காள் கணவர் அழகா?
- உங்கள் கணவர் சாகவேண்டுமென்று என்றாவது நினைத்ததுண்டா?

(மக்களே நம்புங்கள். இந்த கேள்விக்கு அந்தப் பெண்மணி ஆம் என்று பதில் கூறினார். அந்த பதிலை நிலைப்படுத்த, தன் கணவர் ஒரு காலத்தில் குடிகாரராய் இருந்தார் என்றும், அப்போது இவர் தன் கணவர் இவ்வாறு இருப்பதற்கு சாகலாம் என்றும் நினைத்ததாக எதோ ஒரு காரணத்தை உணர்ச்சிவசப்பட்டு பேசினார்).

அடுத்த கேள்வி

- உங்களுக்கு வேறு ஒரு ஆணுடன் உறவு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

இதற்கு அந்தப்பெண் 'இல்லை நான் அவ்வாறு செய்ய மாட்டேன்' என்று பதில் கூறினார். ஆனால் லை-டீடக்டர் கருவி ஒளி எழுப்பவே 'உங்கள் பதில் தவறு என்றும், தாங்கள் பொய் சொல்லியுள்ளீர்கள்' என்றும் தொகுப்பாளர் கூறினார். அதற்கு அப்புறம் அந்தப்பெண் அழுது புரண்டதுதான் மிச்சம். நாளை அந்தப் பெண்ணைப்பற்றி உடன் பணிபுரிபவர்கள்,அவர் பள்ளியில் உள்ள மாணவர்கள் எவ்வளவுக் கேவலமாக நினைப்பார்கள்.சமுதாயத்தில் ஆசிரியர் பணியில் இருக்கும் ஒருவர் பணத்திற்காக ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்? ஏன் இவ்வாறு அசிங்கப்பட வேண்டும்?


இந்த நிகழ்ச்சியில் சில பிரபலங்களும் கலந்து கொள்வார்கள். கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கூட இதில் கலந்து கொண்டு ஒரு கட்டத்தில் உண்மையை சொல்கிறேன் என்று, சச்சினைப் பற்றி அவதூறாகப் பேசிப் பின் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.


ஆனால் இன்றளவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமானோர் விண்ணப்பித்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இதிலிருந்து ஒன்று மட்டும் நன்றாக தெரிகின்றது. மக்கள் பணத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கேவலப்படுத்திக் கொள்ளத் தயாராய் உள்ளார்கள்.


இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களோ, 'இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரின் நேர்மையையும், புத்திக்கூர்மையையும் பாராட்டுவதாகவும், இதன்மூலம் மேலும் பல மக்கள் உண்மையைக் காப்பாற்ற முன் வருவார்கள்' என்றும் தெரிவித்துள்ளார்கள்.


இந்த கொடுமையை என்னனு சொல்ல?????


6 comments:

  1. இன்றளவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமானோர் விண்ணப்பித்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இதிலிருந்து ஒன்று மட்டும் நன்றாக தெரிகின்றது. மக்கள் பணத்திற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கேவலப்படுத்திக் கொள்ளத் தயாராய் உள்ளார்கள்.
    Super Finishining of this post.

    ReplyDelete
  2. நீங்க சொல்றதைப்பார்த்தா இந்த நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கும் போலத்தான் தோணுது

    ReplyDelete
  3. @பிரவீன்

    நன்றி

    ReplyDelete
  4. @reena

    நிகழ்ச்சி நல்லா இருக்குதா?
    என்ன வில்லத்தனம்!!!

    ReplyDelete
  5. ithu oru mokka show...lie detector is one useless machine..anyone with good heart beat control can cheat it...neenga solrathu poyaavay irunthalum..athu nala saria kadnupudika teriathu..athey samayam konjam tension paartyna kooda unmaiya sonalum it will say lie..itha vachu oru show..athula kenathanama kelvi vera...naansense

    ReplyDelete
  6. @gils

    ethukku ivalavu tension?...nenga intha show a thitreengala illa itha pathiva pota enna thitreengalanu theriala :-)

    ReplyDelete