Sunday, July 19, 2009

காளமேகப்புலவரின் மோர்ப் பாடல்...........

காளமேகப்புலவரின் முந்தையப் பதிவிற்குப் பயணிகளின் ஆதரவைப் பார்த்து இந்த இரண்டாவது பதிப்பை உங்களுக்காக இங்கு எழுதியிள்ளோம்.

ஒரு முறை காளமேகப்புலவர் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு ஆய்ச்சியர் குலப் பெண் மோர் விற்றுக் கொண்டு இருந்தாள். அவருக்குத் தாகமாக இருந்ததால் அப்பெண்ணிடம் சென்று ஒரு குவளை மோர் வாங்கிக் குடித்தார். பின்பு குடித்த மோருக்குப் பணம் கொடுத்தார். அவரை புலவர் என்று அறிந்திருந்த அப்பெண் பணம் வேண்டாம் என்றும் பதிலாகத் தன் மோரைப் பற்றி ஒரு பாடல் பாடுமாறும் கேட்டாள்.

அதற்கு புலவர்,
கார்என்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது
நீர் என்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்தபின்
வார்ஒன்றும் மென்முலையார் ஆய்ச்சியர்கை வந்தபின்
மோர்என்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!


என்று நகைச்சுவையுடன் பாடல் ஓன்று பாடினார்.

விளக்கம்:
வானத்தில் இருக்கும் போது மேகம் என்ற பெயருடன் விளங்குகின்றாய். பின்பு மழையாகப் பொழிந்து நிலத்தில் ஓடும் போது நீர் என்ற பெயருடன் ஓடுகின்றாய். ஆய்ச்சியர் கையில் உள்ள இந்தப் பானையில் வந்தவுடன் மோர் என்று பெயர் பெற்று மூன்று பெயருடன் விளங்குகின்றாயே! என்று வியந்து கூறுவது போல் பாடல் உள்ளது.

அதாவது மோரில் சிறிது தண்ணீர் அதிகமாகக் கலந்து இருந்ததை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்.

பயணிகளே! இந்த வலைப் பூவில் ஒரு மலராத மொட்டாக உள்ள இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். உங்கள் பாராட்டுகள் மட்டுமே எங்களுக்கு உற்சாகம்.

12 comments:

  1. காளமேகப்புலவரின் குறும்பு கொப்புளிக்கும் பாடல் இது. அப்பப்போ அவரது மற்ற பாடல்களையும் கொடுங்க.

    ReplyDelete
  2. @ராஜா

    உங்கள் ஆதரவிற்கு நன்றி

    ReplyDelete
  3. hey intha paatu naan iskoola padichirukeen

    ReplyDelete
  4. காளமேகப் புலவரின் பாடல்களில் இது ஒரு துளியாக இருந்தாலும் சுவையான பாடல்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. @Girls

    எட்டாம் வகுப்பு படிக்கும் போது நானும் படித்திருக்கிறேன். ஆனால் எல்லோரும் படித்திருப்பார்கள் என்பதை நம்மால் உறுதி செய்ய முடியாது. ஆகவே இங்கு பதிவு செய்துள்ளோம்.

    ReplyDelete
  6. //ஆனால் எல்லோரும் படித்திருப்பார்கள் என்பதை நம்மால் உறுதி செய்ய முடியாது. ஆகவே இங்கு பதிவு செய்துள்ளோம்.//
    aama enaku padicha gbagam illai.....maranthu pochu

    ReplyDelete
  7. //அதாவது மோரில் சிறிது தண்ணீர் அதிகமாகக் கலந்து இருந்ததை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார். //

    Over kusumbu dhaan pulavarukku :))))))


    //23-C said...

    @Girls//

    ROTFL :))) Balaththa damage to Gils :)

    ReplyDelete
  8. @அன்னம்
    உங்கள் வருகைக்கு நன்றி !

    ReplyDelete
  9. @G3
    வம்புல மாட்டிவிடாதீங்க!

    apologies to Gils for the mistake!!!

    ReplyDelete
  10. என் மோரைப்பத்தி புகழ்ந்து பாடுங்கன்னு அந்தம்மா சொன்னா, இவர் இப்படி கலாயிச்சு பாடிட்டாரே??? மோர் வித்த பெண்ணின் முகத்தில் வழிந்த அசட்டுத்தனத்தை பத்தி அடுத்த வெண்பா ல சொல்லி இருப்பாரோ என்னமோ..
    Please keep researching.. Very nice and informative. இலக்கிய சுவை இருக்கே...Irresistably Delicious

    ReplyDelete
  11. Thank you so much for this wonderful service. Its helped me to teach my son this song in his ICSE 5th std

    ReplyDelete